புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் நடிகரான சிரஞ்சீவி தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்துள்ள 'ஆச்சார்யா' படம் நாளை மறுதினம் ஏப்ரல் 29ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது புதிய படங்களுக்கு டிக்கெட் கட்டணங்களை ஆந்திர, தெலங்கானா அரசுகள் உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்தது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சிரஞ்சீவி, “கொரோனா ஊரடங்கு அனைத்து தொழில்களையும் பாதிப்படைய வைத்தது, அதில் சினிமாவும் விதிவிலக்கல்ல. அந்த தாமதத்தால் எங்களது படத்தின் பட்ஜெட் அதிகமானது. நாங்கள் 50 கோடியை வட்டியாக மட்டுமே கொடுத்தோம் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா ?. அந்த 50 கோடியில் ஒரு மீடியம் பட்ஜெட் படத்தை எடுத்து முடித்திருக்கலாம்.
ரசிகர்களுக்கு அற்புதமான விஷுவல் அனுபவத்தைக் கொடுப்பதற்காக நாங்கள் கூடுதலாக செலவு செய்கிறோம். அப்படி செலவு செய்யும் போது அரசாங்கத்திடம் எங்களது படங்களுக்கு கூடுதல் கட்டணம் கேட்பதில் தவறில்லை என நினைக்கிறேன். நாங்கள் பிரபலங்கள், 42 சதவீதம் வருமான வரி செலுத்துகிறோம், இது மற்றவர்களைக் காட்டிலும் அதிகம். அதில் ஒரு சிறு பகுதியை இப்படி கேட்பதில் தவறில்லை. கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் நாங்கள் மீள வேண்டும்,” என்று கூறியிருக்கிறார்.