ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

அதிக படங்களில் நடித்த தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் லட்சுமி. 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நாடக நடிகையாக இருந்த அம்மாவின் வழியில் 1961ம் ஆண்டு ஸ்ரீவள்ளி படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். பின்னர் எம்ஜிஆர், சிவாஜி, சிவகுமார், ஜெமினி கணேசன் என அப்போது முன்னணியில் இருந்த அத்தனை ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தார்.
'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது பெற்றார். இதுதவிர தமிழகம், கேரளா, கர்நாடக மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜ்குமார் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வழங்கினார். பெங்களூருவில் நடந்த 2017ம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருது வழங்கும் விழாவில் லட்சுமிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.




