39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு |
அதிக படங்களில் நடித்த தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் லட்சுமி. 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நாடக நடிகையாக இருந்த அம்மாவின் வழியில் 1961ம் ஆண்டு ஸ்ரீவள்ளி படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். பின்னர் எம்ஜிஆர், சிவாஜி, சிவகுமார், ஜெமினி கணேசன் என அப்போது முன்னணியில் இருந்த அத்தனை ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தார்.
'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது பெற்றார். இதுதவிர தமிழகம், கேரளா, கர்நாடக மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜ்குமார் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வழங்கினார். பெங்களூருவில் நடந்த 2017ம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருது வழங்கும் விழாவில் லட்சுமிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.