ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
அதிக படங்களில் நடித்த தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் லட்சுமி. 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நாடக நடிகையாக இருந்த அம்மாவின் வழியில் 1961ம் ஆண்டு ஸ்ரீவள்ளி படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். பின்னர் எம்ஜிஆர், சிவாஜி, சிவகுமார், ஜெமினி கணேசன் என அப்போது முன்னணியில் இருந்த அத்தனை ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தார்.
'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது பெற்றார். இதுதவிர தமிழகம், கேரளா, கர்நாடக மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜ்குமார் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வழங்கினார். பெங்களூருவில் நடந்த 2017ம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருது வழங்கும் விழாவில் லட்சுமிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.