இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
சக்திவேல் இயக்கத்தில் விதார்த், லட்சுமி ப்ரியா சந்திரமவுலி, கருணாகரன், மசூம் சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பயணிகள் கவனிக்கவும்'. இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் அடுத்த வாரம் ஏப்ரல் 29ம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'பயணிகள் கவனிக்கவும்' என்ற தலைப்பு தன்னுடைய அப்பாவின் புகழ் பெற்ற நாவலின் தலைப்பு. அதை படத்திற்காக வைக்க தங்களிடம் எந்தவித அனுமதியையும் பெறவில்லை என மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் குற்றம் சாட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ஆஹா ஓ.டி.டி க்கும், ஆல் இன் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு பாலகுமாரன் குடும்பத்தின் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து இன்று(ஏப்., 25) காலை இயக்குனர் எஸ்பி சக்திவேல் மற்றும் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா இருவரும் பாலகுமாரனின் வீடு தேடி சென்று அவர்களது விளக்கத்தை கொடுத்து, மன்னிப்பும் கேட்டுள்ளனர். இதையடுத்து இந்த பிரச்னையை சுமூகமாக பேசி முடித்துக் கொண்டதாக பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் தெரிவித்துள்ளனர்.