ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திரிஷா நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ஒரு படத்தில் திரிஷா நடிக்கிறார். பல குறும்படங்கள், விளம்பர படங்கள் மற்றும் வெப்தொடர் எடுத்த அருண் வசீகரன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இழப்பதற்கு எதுவுமில்லாத ஒரு பெண் இரத்த பூமியில் மேற்கொள்ளும் ஆக்ரோஷமான பயணமே கதையின் கரு. 2000களில் மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது.
திரிஷா முதன்மை நாயகியாக நடிக்க, அவருடன் மியார் ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப், எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் நடிக்கிறார்கள். உண்மை சம்பவம் நிகழ்ந்த மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(ஏப்., 25) முதல் படப்பிடிப்பை துவக்கி உள்ளனர். தொடர்ச்சியாக 50 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.