எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பொதுவாக மலையாளத்தில் ஹிட் அடித்த படம் ஒன்றை மற்ற தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்வதற்காக போட்டி போட்டு வாங்குவார்கள். ஆனால் ஒவ்வொரு மொழி ரீமேக்கும் வெவ்வேறு காலகட்டத்தில் வெளியாவது தான் வழக்கம். இதற்கு முன்னதாக திலீப் நடித்த பாடிகார்ட், மோகன்லால் நடித்த திரிஷ்யம் ஆகிய படங்களின் ரீமேக்குகள் இந்த விதமாகத்தான் வெளியாகி உள்ளன.
அதேசமயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஜோசப் என்கிற படமும் இதே போல தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக்காகி வருகிறது. இந்த நிலையில் தமிழில் இதன் ரீமேக்கில் ஆர்கே சுரேஷ் கதாநாயகனாக நடிக்க ஒரிஜினலை இயக்கிய இயக்குனர் பத்மகுமார் தமிழிலும் இயக்கியுள்ளார். விசித்திரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் மே 6ம் தேதி ரிலீசாக உள்ளது.
அதேபோல இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் டாக்டர் ராஜசேகர் நடித்துள்ளார். சேகர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அவரது மனைவி ஜீவிதா இயக்கியுள்ளார் நேற்று நடைபெற்ற சேகர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இந்த படம் மே 20ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு மலையாள படத்தின் தமிழ் தெலுங்கு ரீமேக்குகள் ஒரே சமயத்தில் அதிலும் 15 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்த வெளியாகிறது என்பது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான்.