இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சூர்யா தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலாவின் டைரக்ஷனில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது மும்பைக்கு பறந்து உள்ளார் சூர்யா. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சுதா கொங்கரா டைரக்ஷனில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதைத் தொடர்ந்து இந்த படம் தற்போது ஹிந்தியிலும் ரீமேக்காக இருக்கிறது. இந்த படத்தை ஹிந்தியில் சூர்யாவின் 2டி நிறுவனமும் பிரபலமான அபுண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் என்கிற பாலிவுட் பட நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதமே இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் பணிகளை முடுக்கி விடுவதற்காக சூர்யாவும் அவரது நண்பரும் 2டி சினிமாவின் நிர்வாக தயாரிப்பாளருமான ராஜசேகரும் மும்பை சென்றுள்ளனர்.