காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
இறுதி சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கி பெரிய அளவில் பேசப்படும் இயக்குனராக உள்ள சுதா கொங்கரா, அடுத்ததாக சூர்யா உடன் இணைய உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. இதற்கிடையே சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கை இயக்குவதாகவும் ஒப்பந்தமானார். இது ஒருபுறம் இருக்க சூரரைப் போற்று வெற்றிக்கு பிறகு இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், இயக்குனர் சுதா, நடிகர் அஜித்குமாருடன் இணைய இருப்பதாக கூறினார். அதன் பிறகு, இருவரும் இணையும் அந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால், அதற்குள்ளாக கேஜிஎப், கேஜிஎப் 2 படங்களை தயாரித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்துள்ள ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம், தங்களுடைய தயாரிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா ஒரு படம் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது அஜித் உடன் இணையும் படமா அல்லது சூர்யாவை வைத்து எடுக்க உள்ள படமா என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், சூர்யாவின் படத்தை அவரே தனது 2டி நிறுவனம் வாயிலாக தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் படம் அஜித் படமாக தான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நடிகர் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கும் படத்திலும், அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இப்படங்களை முடித்த பிறகு சுதா கொங்கரா - அஜித் இணையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.