பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சிலம்பரசன் நடித்த 'போடா போடி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். கடந்த பத்து வருடங்களில் மூன்றே மூன்று படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். 2015ல் வெளிவந்த 'நானும் ரவுடிதான்' படம் இயக்குனராக அவரைப் பற்றி அதிகம் பேச வைத்தது. அதன்பிறகு 2018ல் சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கினார். சுமார் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் வரும் ஏப்.,28ம் தேதி வெளியாகிறது.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில், ‛படம் வெளியாவதற்கு முன்பு இருக்கும் இந்த 5 நாட்கள் தான் பிரசவ வலியை போன்றது. என் லவ்வுடன், பேபியுடன் கடைசி 5 நாட்கள். இந்த வலி தேவை தான். ஏனென்றால் காதல் என்றாலே வலி இருக்கும். இசையமைப்பாளர் அனிருத்துடன் தொடர்ச்சியாக ஒவ்வொரு திரைப்பட காட்சியையும் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டிருக்கிறேன். அனைவரும் இந்த படத்தில் அருமையாக நடித்து இருக்கின்றனர்.இந்த படத்திற்காக நேசத்துடன் அதிகம் உழைத்திருக்கிருக்கிறேன்.' என பதிவிட்டுள்ளார்.