காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
சிலம்பரசன் நடித்த 'போடா போடி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். கடந்த பத்து வருடங்களில் மூன்றே மூன்று படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். 2015ல் வெளிவந்த 'நானும் ரவுடிதான்' படம் இயக்குனராக அவரைப் பற்றி அதிகம் பேச வைத்தது. அதன்பிறகு 2018ல் சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கினார். சுமார் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் வரும் ஏப்.,28ம் தேதி வெளியாகிறது.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில், ‛படம் வெளியாவதற்கு முன்பு இருக்கும் இந்த 5 நாட்கள் தான் பிரசவ வலியை போன்றது. என் லவ்வுடன், பேபியுடன் கடைசி 5 நாட்கள். இந்த வலி தேவை தான். ஏனென்றால் காதல் என்றாலே வலி இருக்கும். இசையமைப்பாளர் அனிருத்துடன் தொடர்ச்சியாக ஒவ்வொரு திரைப்பட காட்சியையும் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டிருக்கிறேன். அனைவரும் இந்த படத்தில் அருமையாக நடித்து இருக்கின்றனர்.இந்த படத்திற்காக நேசத்துடன் அதிகம் உழைத்திருக்கிருக்கிறேன்.' என பதிவிட்டுள்ளார்.