தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
தமிழ்த் திரையுலகத்தில் சில நகைச்சுவைக் காட்சிகளை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது. அப்படி ஒரு நகைச்சுவைக் காட்சி பிரபுதேவா, வடிவேலு நடித்த 'மனதைத் திருடி விட்டாய்' படத்தில் உள்ளது. அந்தப் படத்தில் பிரபுதேவா, வடிவேலு, விவேக் ஆகியோர் கூட்டணி காமெடியில் ஒரு கலக்கு கலக்கியது.
படம் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் படத்தில் இடம் பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் அப்போதெல்லாம் சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்பாகும். இப்போது கூட அந்தக் காட்சிகளைப் பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.
அதிலும் ஒரு காட்சியில் வடிவேலு, 'சிங் இன் த ரெயின், ஐ வான்ட் சிங் இன் த ரெயின்' என்று பாடி நடிக்கும் காட்சியை யாராலும் மறக்க முடியாது. பிரபுதேவா, வடிவேலு ஆரம்பக் காலத்திலிருந்தே சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள்.
பிரபுதேவா, வடிவேலு தற்போது சந்தித்த வீடியோ ஒன்றை பிரபுதேவா பகிர்ந்துள்ளார். அதில் வடிவேலு அந்த 'சிங் இன் த ரெயின்' பாடலைப் பாடி, பிரபுதேவாவைக் கட்டிப் பிடித்து மகிழ்ந்துள்ளார். 'நட்பு' என ஒரே ஒரு வார்த்தையில் அந்த சந்திப்பு பற்றி பதிவிட்டுள்ளார் பிரபுதேவா.