பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்து ஏப்ரல் 14ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள படம் 'கேஜிஎப் 2'. எதிர்பார்ப்புகளுக்கும் மீறி இப்படம் அதிக வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது.
ஹிந்தியில் இரண்டே நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்து, இந்திய அளவில் 240 கோடி வசூலைக் கடந்தது. நேற்றுடன் இப்படம் உலக அளவில் 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஏற்கெனவே முன்பதிவுகள் நடந்து முடிந்துவிட்டது. இன்று ஒரு நாளில் இப்படம் மீண்டும் 100 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், முதல் வார இறுதி வசூலாக இப்படம் 500 கோடி வசூலைக் கடந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்திய மாநிலங்களில் அதிக பட்சமாக கர்நாடகாவில் 70 கோடி வசூலை இப்படம் கடந்துள்ளது. தெலுங்கு மாநிலங்களில் 65 கோடி, தமிழகத்தில் 25 கோடி, கேரளாவில் 20 கோடி வசூலித்துள்ளது என்கிறார்கள்.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் முதல் வார இறுதி வசூலை 'கேஜிஎப் 2' படம் நிச்சயம் முறிடித்துவிடும் என்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் தகவலாக உள்ளது.