தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்து ஏப்ரல் 14ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள படம் 'கேஜிஎப் 2'. எதிர்பார்ப்புகளுக்கும் மீறி இப்படம் அதிக வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது.
ஹிந்தியில் இரண்டே நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்து, இந்திய அளவில் 240 கோடி வசூலைக் கடந்தது. நேற்றுடன் இப்படம் உலக அளவில் 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஏற்கெனவே முன்பதிவுகள் நடந்து முடிந்துவிட்டது. இன்று ஒரு நாளில் இப்படம் மீண்டும் 100 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், முதல் வார இறுதி வசூலாக இப்படம் 500 கோடி வசூலைக் கடந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்திய மாநிலங்களில் அதிக பட்சமாக கர்நாடகாவில் 70 கோடி வசூலை இப்படம் கடந்துள்ளது. தெலுங்கு மாநிலங்களில் 65 கோடி, தமிழகத்தில் 25 கோடி, கேரளாவில் 20 கோடி வசூலித்துள்ளது என்கிறார்கள்.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் முதல் வார இறுதி வசூலை 'கேஜிஎப் 2' படம் நிச்சயம் முறிடித்துவிடும் என்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் தகவலாக உள்ளது.