நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? |
சமந்தாவை பொறுத்தவரை தற்போது தெலுங்கு திரையுலகில் பிசியாக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்து வரும் ஒரே படமான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த படப்பிடிப்பு தொடர்பாக அவ்வப்போது சென்னை வந்து சென்றார் சமந்தா. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சமந்தாவை சந்தித்த நடிகர் சதீஷ் அவருடன் எடுத்துக்கொண்ட செல்பி ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு கத்தி பட நினைவுகளையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் சமந்தா. அந்த படத்தில் விஜய்யின் நண்பனாக நடித்து இருந்த சதீஷூம் சமந்தாவுடன் பல காட்சிகளில் இணைந்து நடித்து இருந்தார். அதன்பிறகு நீண்ட நாளைக்கு பின் சமந்தாவை இப்போதுதான் சந்தித்துள்ளதாக கூறியுள்ள சதீஷ், கத்தி பட நாட்களை மிஸ் பண்ணுவதாக கூறியதுடன் வரும் காலத்தில் சமந்தா நடிக்க உள்ள படங்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.