மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
பாலிவுட்டின் முன்னணி நாயகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர், நாயகியரில் ஒருவரான ஆலியா பட் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார்கள். இவர்களது திருமணம் ஏப்., 15 அன்று மும்பையில் நடைபெற உள்ளது. இரு வீட்டாரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளார்களாம்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியை மட்டும் பிரம்மாண்டமாக நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் பாலிவுட்டின் பிரபலங்கள் பலரும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. திருமணத்திற்கு முந்தைய சில நிகழ்வுகளான சங்கீத் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாளை(ஏப்., 13) முதல் துவங்க உள்ளது.
ஆலியா பட் சமீபத்தில்தான் தெலுங்கில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடத்திலும் அறிமுகமானார்.