ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் | ''தமிழ் ஐசியூ.,வுல இருக்கு; எங்க போனாலும் தலைநிமிர்ந்து தமிழ்ல பேசுங்க'': செல்வராகவன் வலியுறுத்தல் | நடிகைகளே பொறாமைப்பட்ட நாயகி சில்க் ஸ்மிதா | உறவுகளின் மேன்மையைச் சொல்கிறதா 'மெய்யழகன்' டிரைலர் | ரஜினியின் வேட்டையன் படத்தின் முக்கிய கதைக்கரு வெளியானது! | பவன் கல்யாண் படத்தில் சிம்பு பாடிய பாடல் விரைவில் வெளியீடு | மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்! ஜெயம் ரவி விவகாரத்தில் களம் இறங்கிய பாடகி கெனிஷா!! | அக். 2ல் வெளியாகும் வேட்டையன் பட டிரைலர் | கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி | ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது |
ராஜமவுலி படங்களின் பிரமாண்டத்துக்கும், வெற்றிக்கும் தனித்தன்மை வாய்ந்த கதைகளை உருவாக்கி கொடுத்து பக்கபலமாக இருந்து வருபவர் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத். சமீபத்தில் வெளியாகி ஆயிரம் கோடி வசூல் என்கிற மிகப்பெரிய இலக்கை தொட்டுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டு தூண்களாக நடித்த ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரின் கதாபாத்திர தேர்வு குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளிப்படையாக கூறியுள்ளார்.
“இந்தப்படத்தின் கதையை உருவாக்கும்போதே இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இருவரும் தான் நடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்துவிட்டோம்.. அதன்பின் அல்லூரி சீதாராம ராஜூ வேடத்தில் ராம் சரணையும், கொமரம் பீம் கதாபாத்திறல் ஜூனியர் என்டிஆரையும் நடிக்க வைக்க முடிவு செய்தோம்..
காரணம் ஜூனியர் என்டிஆரால் சீதாராம் கேரக்டரிலும் நடிக்க முடியும்.. கொமரம் பீமாகவும் நடிக்க முடியும்.. ஆனால் ராம்சரணுக்கு கொமரம் பீம் கதாபாத்திரம் செட்டாகாது. ஏனென்றால் கொமரம் பீம் கதாபாத்திரம் பலவகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டிய ஒன்று.. ஜூனியர் என்டிஆர் இயல்பாகவே அதில் பொருந்தி விடுவார்.. அதேசமயம் எந்நேரமும் சீரியஸாக இருக்கும் சீதாராம் கதாபாத்திரத்திற்கு ராம்சரண் ரொம்பவே பொருத்தமாக இருந்தார்” என கூறியுள்ளார் விஜயேந்திர பிரசாத்.