‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் | ரூ.60 கோடி பண மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு | என் இதயம் நொறுங்கிவிட்டது : நாய்களுக்காக கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா | தர்ஷனுக்கு வழங்கிய ஜாமின் ரத்து : சுப்ரீம் கோர்ட் உத்தரவு | அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் |
தமிழ் சினிமாவில் ‛வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன்' படத்தில் ‛புஷ்பா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபலேட்டி. இவர் தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையாகவும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். ஆனால், இவர் தமிழில் முன்னணி நடிகரான பாபி சிம்ஹாவின் அக்கா என்பது பலருக்கு தெரியாது. பாபி சிம்ஹாவின் திருமணத்தில் கூட ரேஷ்மா கலந்து கொள்ளவில்லை. இதனால் ரேஷ்மாவிற்கு பாபி சிம்ஹாவிற்கும் பேச்சுவார்த்தை கிடையாது என்று கூட செய்திகள் பரவியது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நெறியாளர் ஒருவர் உங்களை பாபியுடன் சேர்த்து பார்க்கவே முடியவில்லையே? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரேஷ்மா, 'நாங்கள் வீட்டில் சந்தித்துக் கொள்வோம். நிறைய போட்டோக்கள் இணையத்தில் இருக்கிறது. நாங்கள் ஒரே குடும்பம். அதை ஏன் விளம்பரப்படுத்த வேண்டும்' என அதில் கூறியுள்ளார்.