ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

பொதுவாக திரையுலக பிரபலங்கள், குறிப்பாக நடிகர் நடிகைகள் தாங்கள் வாகனங்களில் பயணிப்பது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகவும் ரசிகர்களின் அன்புத்தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காகவும் தங்களது கார் கண்ணாடிகளில் கருப்பு பிலிம்களை ஒட்டி வலம் வருகின்றனர். இந்தியாவில் 2012லிருந்து இப்படி கருப்பு நிற பிலிம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆந்திராவில் தற்போது போக்குவரத்து போலீஸார் இதை கடுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் சமீபத்தில் மார்க்கெட் பகுதியில் அப்படி கருப்பு பிலிம் ஒட்டப்பட்ட ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் பயணித்தது தெரிய வந்துள்ளது. பிரபல நடிகராக இருந்தாலும் விதிமீறல் என்பதால் ரூ.700 அபராதம் விதித்து, அதனை வசூலித்த பின்னரே அவரை அனுப்பி வைத்தனராம். அல்லு அர்ஜுனும் எந்தவித் வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் அபாரத தொகையை செலுத்திவிட்டு அமைதியாக சென்றுவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.