காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் |
பொதுவாக திரையுலக பிரபலங்கள், குறிப்பாக நடிகர் நடிகைகள் தாங்கள் வாகனங்களில் பயணிப்பது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகவும் ரசிகர்களின் அன்புத்தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காகவும் தங்களது கார் கண்ணாடிகளில் கருப்பு பிலிம்களை ஒட்டி வலம் வருகின்றனர். இந்தியாவில் 2012லிருந்து இப்படி கருப்பு நிற பிலிம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆந்திராவில் தற்போது போக்குவரத்து போலீஸார் இதை கடுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் சமீபத்தில் மார்க்கெட் பகுதியில் அப்படி கருப்பு பிலிம் ஒட்டப்பட்ட ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் பயணித்தது தெரிய வந்துள்ளது. பிரபல நடிகராக இருந்தாலும் விதிமீறல் என்பதால் ரூ.700 அபராதம் விதித்து, அதனை வசூலித்த பின்னரே அவரை அனுப்பி வைத்தனராம். அல்லு அர்ஜுனும் எந்தவித் வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் அபாரத தொகையை செலுத்திவிட்டு அமைதியாக சென்றுவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.