டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மும்பை:'பாலிவுட்'டின் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, 50, ஹிந்தி மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி பாடல்களுக்கு, நடனம் அமைத்துள்ளார். பல விருதுகளை பெற்ற இவர், சமீபத்தில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்று பிரபலமான, 'ஊ சொல்றியா... மாமா...' என்ற பாடலுக்கும் நடனம் அமைத்தார்.
கடந்த 2020ல், நடனக் குழுவில் இருந்த ஒரு பெண்ணை, கணேசும், அவரது உதவியாளரும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, அந்தப் பெண் அளித்த புகாரில், மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை கணேஷ் மறுத்தார். இந்நிலையில், இந்த வழக்கில், மும்பை போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.