நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
கேஜிஎப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் அதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்க, யஷ், கிர்த்தி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பெங்களூருவில் பிரம்மாண்டமாய் நடந்தது.
கேஜிஎப் 2 திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாள் ஏப்ரல் 13 ஆம் தேதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் படமும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. எனவே கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் படங்களுக்கும் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று கருத்துக்கள் எழுந்தது .
இதுப்பற்றி கேஜிஎப் 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் யஷ் "இது கேஜிஎப் படத்திற்கும் பீஸ்ட் படத்திற்கும் இடையே நடக்கும் போட்டியல்ல. இரு படங்களும் இணைந்தே வெளியாகின்றன. இது ஒன்றும் தேர்தல் அல்ல. இரண்டு படங்களையும் மக்கள் பார்க்க முடியும். விஜய் மிகப்பெரிய நடிகர். அவர் அடைந்த உயரத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அவரது கலை பணியும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் தன்மையையும் என்னோடு ஒப்பிட முடியாது. நான் கண்டிப்பாக பீஸ்ட் பார்ப்பேன். அதே போல விஜய் சாரின் ரசிகர்களுக்கும் கேஜிஎப் பிடிக்கும் என நம்புகிறேன். நாம் இணைந்து இந்த இரு படங்களையும் கொண்டாடுவோம்" எனக் கூறியுள்ளார்.