டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை |

சமீபத்தில் பிரபாஸ் பூஜா ஹெக்டே நடிப்பில் பான் இந்தியா படமாக ராதே ஷ்யாம் வெளியானது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கியிருந்த இந்தப்படம் ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஆக்ஷன் காட்சிகள் இல்லாததும், முழுநீள காதல் கதையாக இருந்ததும் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது. இதனால் தியேட்டர்களில் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் வருகை குறைந்ததுடன் படம் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேல் நட்டம் அடைந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆந்திராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாபு கோகிநேனி என்பவர் இந்த படம் குறித்தும் இந்த படத்தில் கைரேகை ஜோதிட வல்லுனராக நடித்திருந்த பிரபாஸ் குறித்தும் கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த படத்தின் நாயகன் விக்ரமாதித்யா கைரேகை பார்த்து மற்றவர்களின் எதிர்காலத்தை சொல்பவராக நடித்துள்ளார். இந்த படம் ஒப்புக் கொள்வதற்கு முன்பு தயாரிப்பாளரின் கைரேகைகளை அவர் பார்த்திருந்தால் இவ்வளவு பெரிய நட்டம் வருவதை தவிர்த்திருக்கலாமே என்று கூறியுள்ளார். மேலும் இந்த படம் குருட்டுத்தனமான நம்பிக்கைகளையும் வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் பதிவுகளையும் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.




