ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
சமீபத்தில் பிரபாஸ் பூஜா ஹெக்டே நடிப்பில் பான் இந்தியா படமாக ராதே ஷ்யாம் வெளியானது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கியிருந்த இந்தப்படம் ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஆக்ஷன் காட்சிகள் இல்லாததும், முழுநீள காதல் கதையாக இருந்ததும் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது. இதனால் தியேட்டர்களில் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் வருகை குறைந்ததுடன் படம் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேல் நட்டம் அடைந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆந்திராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாபு கோகிநேனி என்பவர் இந்த படம் குறித்தும் இந்த படத்தில் கைரேகை ஜோதிட வல்லுனராக நடித்திருந்த பிரபாஸ் குறித்தும் கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த படத்தின் நாயகன் விக்ரமாதித்யா கைரேகை பார்த்து மற்றவர்களின் எதிர்காலத்தை சொல்பவராக நடித்துள்ளார். இந்த படம் ஒப்புக் கொள்வதற்கு முன்பு தயாரிப்பாளரின் கைரேகைகளை அவர் பார்த்திருந்தால் இவ்வளவு பெரிய நட்டம் வருவதை தவிர்த்திருக்கலாமே என்று கூறியுள்ளார். மேலும் இந்த படம் குருட்டுத்தனமான நம்பிக்கைகளையும் வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் பதிவுகளையும் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.