ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் |
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் மலைவாசி பெண் செங்கனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ். அதற்கு முன்னதாக தமிழில் சித்தார்த்துக்கு ஜோடியாக சசி இயக்கத்தில் சிவப்பு மஞ்சள் பச்சை என்கிற படத்தில் நடித்திருந்தாலும் ஜெய்பீம் படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளம் பெற்றுத் தந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான மகேஷின்டே பிரதிகாரம் படத்தில் அறிமுகமான லிஜோமோல் மலையாளத்தில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
அடுத்து தமிழில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்ததும் மலையாளத்திலிருந்து இவரை தேடி பட வாய்ப்புகள் வருவது குறைந்து விட்டதாம். ஆனால் ஜெய்பீம் படத்தின் வெற்றிக்கு பிறகு இவரைத்தேடி மீண்டும் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் தற்போது புலிமட என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், விஷுத மேஜோட் என்கிற படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் லிஜோமோல். விரைவில் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றனவாம்.