துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
புதியவர்கள் நடித்துள்ள ‛காதல் செய்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா இளையராஜாவின் கோடம்பாக்க ஸ்டூடியோவில் நடந்தது. இதில் இளையராஜா, பாரதிராஜா, பி.வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பாரதிராஜா, இளையராஜா இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டார்கள். கட்டி அணைத்துக் கொண்டார்கள். இருவருக்கு ஒரே ரோஜா மாலை அணிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இருவரின் இணைப்பு விழாவாகவே நடந்தது.
இந்த விழாவில் இளையராஜா பேசியது தான் ஹெலைட் அவர் பேசியதாவது: நிகழ்கால பாரதிராஜாக்களே... நிகழ்கால இளையராஜாக்களே... நிகழ்கால பி.வாசுக்களே.... ஏன் எதிர்கால பாரதிராஜாக்களே, இளையராஜாக்களே... ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் எல்லா காலத்துக்கும் பாரதிராஜா ஒருவர் தான். பி.வாசு, இளையராஜா ஒருவர் தான். எப்படி சூரியன் மாதிரி இன்னொன்று வருவதில்லையோ. அதுபோல ஒருத்தர போல இன்னொருத்தன் வருவதில்லை. அதுலாம் பொறந்து வரணும்யா.
திருவள்ளுவரே சொல்லி இருக்காரு 'செல்வம் படச்சவனா இருக்குறது வேறுஞ் தெள்ளியவனா இருக்குறது வேறுஞ் தெள்ளியவன்னா தெளிந்த அறிவோடு இருக்குறவன் தெய்வமா கூட இருக்கலாம்.. ஆனா தெளிந்த அறிவுடையவனா இருக்குறது கஷ்டம்.
இந்த படத்துக்கு காதல் செய்னு பேர் வச்சுருக்காங்க... என்ன போல காதல் செய்யுறவன் இருக்க முடியாது. ஆனா நான் எத காதலிக்குறனும்கிறதுல தெள்ளியனா இருக்கேன். இந்த படத்தோட விழாவுக்கு இவளோ பேர் வந்து ஆதரவு கொடுத்திருக்கீங்க. 16 வயதினிலே பண்ணும்போது இவ்ளோ கேமரா கிடையாது. இவ்ளோ மீடியா கிடையாது. படக்குழுவுக்கு வாழ்த்துகள். என்றார்.
இளையராஜா இவ்வளவு ஜாலியாக இதுவரை பேசியதில்லை. சமீபகாலமாக அவரது பேச்சுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.