இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்' படம் இந்த வாரம் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு ஒரு சில பிரம்மாண்ட படங்கள் இந்திய மொழிகளில் வெளிவந்திருந்தாலும் இந்தப் படம் அளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் வெளியாகும் இப்படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தெலுங்கு மாநிலங்களான தெலங்கானா, ஆந்திராவில் சில தியேட்டர்களில் முதல் நாள் காட்சிகளுக்கான முன்பதிவு ஆரம்பமான சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளது. ஜுனியர் என்டிஆர், ராம் சரண் என இரண்டு முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் ரசிகர்களும் போட்டி போட்டு படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இப்படம் முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைக்குமா என இந்தியத் திரையுலகத்தில் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 'பாகுபலி 2' படம் முதல் நாளில் சுமார் 120 கோடி வசூலைப் பெற்றது. இப்போது டிக்கெட்டுகள் விலை அதிகமாகி உள்ளதால் வசூல் தொகை இன்னும் அதிகமாகலாம். படத்திற்கான ரிப்போர்ட் நன்றாக அமைந்துவிட்டால் முதல் வார இறுதி வசூல் முந்தைய அளவில் இல்லாத அளவிற்கு இருக்கும் என்கிறார்கள்.