பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நேரம், பிரேமம் என இரண்டே படங்களை மட்டும் இயக்கியிருந்தாலும் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடையேயும் தனது முத்திரையை அழுத்தமாக பதித்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். குறிப்பாக இவர் இயக்கிய இரண்டு படங்களின் மூலம் அழகும் திறமையும் வாய்ந்த நான்கு கதாநாயகிகளை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர்
ஆனால் பிரேமம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக படம் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன் தற்போது பிரித்விராஜ், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் கோல்டு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் அல்போன்ஸ் புத்ரன் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடியபோது ரசிகர் ஒருவர் விஜய்யை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள் என்கிற கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்ரன், "பிரேமம் படம் வெளியானதும் தமிழ்நாட்டில் இருந்து எனக்கு முதல் வந்த பாராட்டு அழைப்பு நடிகர் விஜய்யிடம் இருந்து தான். அதன்பிறகு அவரை நான் பர்சனலாக நேரிலும் சந்தித்து பேசினேன். ஒருநாள் அவர் என்னை அழைத்து படம் இயக்க சொல்லுவார் என நம்புகிறேன். அதற்காக காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.