ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா |
மலையாள திரையுலகில் ஹீரோவாக அறிமுகமான துல்கர் சல்மான் சினிமாவுக்குள் நுழைந்து பத்து வருடங்களை கடந்து விட்டார். முதல் ஐந்து வருடங்கள் மலையாள திரையுலகில் மட்டும் கவனம் செலுத்தியவர் அதன்பிறகு தமிழில் நுழைந்து அப்படியே தெலுங்கு, அதன்பிறகு பாலிவுட் என கிட்டத்தட்ட பான் இந்தியா நடிகராகவே மாறிவிட்டார். ஆனால் அப்படிப்பட்டவருக்கு ஒரு மொழியில் அவர்களுக்குரிய கலாச்சாரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தை பான் இந்தியா ரிலீஸ் என்று சொல்லி வெளியிடுவதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை என சமீபத்தில் தேசிய சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, "பான் இந்தியா என்கிற வார்த்தை உண்மையிலேயே என்னை எரிச்சல் அடைய வைக்கிறது. இந்த வார்த்தையை கேட்பதற்கு கூட நான் விரும்பவில்லை. சினிமாவில் உள்ள திறமையாளர்கள் ஒவ்வொரு மொழியிலும் சென்று தங்களது திறமைகளை பரிமாறி கொள்ளட்டும்.. அது வரவேற்கத்தக்கது. ஆனால் நாமெல்லாம் ஒரே நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்க திரைப்படங்கள் எப்போதாவது பான் அமெரிக்கா என்று சொல்வதுண்டா ? நான் இதுவரை அப்படி கேட்டதும் இல்லை.
தற்போது இந்தியா முழுவதும் பயணிக்கின்ற பான் இந்திய படம் என சொல்லப்படுகின்ற படம் நிச்சயம் அனைத்து மொழிகளுக்கும் ஆன படமாக எடுக்கப்படுவதில்லை. பான் இந்தியா படம் என்கிற ஒன்றை நாம் கட்டமைக்க முடியாது. அப்படி வெளியாகும் படங்கள் எல்லாம் குறிப்பிட்ட ஒரு மார்க்கெட்டை மையப்படுத்தி மட்டுமே எடுக்கப்பட்டவை ஒரே மார்க்கெட்டுகாக எடுக்கப்பட்டிருந்தாலும் எந்த ஊருக்கும் பொருந்தும் என்கிற ஒரு கதையை. எல்லா ஊர்களிலும் ரிலீஸ் செய்தால் அதுதான் இந்தியா படம்" என்று கூறியுள்ளார் துல்கர் சல்மான். பான் இந்திய படங்கள் மீது அவருக்கு என்ன அவ்வளவு கோபமோ தெரியவில்லை.