இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கன்னடத் திரையுகத்தின் முக்கியமான சினிமா குடும்பம் மறைந்த நடிகர் ராஜ்குமார் குடும்பம். அவரது மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், சமீபத்தில் மறைந்த புனித் ராஜ்குமார். நேற்று கர்நாடக மாநிலம், சிக்பலப்பூர் நகரில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சிவராஜ்குமார், “ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் மற்றொரு பக்கம் துக்கமாகவும் இருக்கிறது. அப்பு (புனித்) மறைவின் துக்கத்தில் இருக்கிறோம். நான் ராஜமவுலியின் பெரிய ரசிகர். ஜுனியர் என்டிஆர், ராம்சரண், பவன் கல்யாண், சிரஞ்சீவி, விஜய், அஜித் ஆகியோரது படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். படங்களை எனக்கு வீட்டில் பார்ப்பது பிடிக்காது, தியேட்டர்களில்தான் பார்ப்பேன். தென்னிந்திய சினிமாவை இந்திய அளவில் கொண்டு சென்றவர் ராஜமவுலி. 'ஆர்ஆர்ஆர்' படத்தை முதல் நாள் முதல் காட்சியில் கண்டிப்பாகப் பார்ப்பேன்,” என்று பேசினார்.
'ஆர்ஆர்ஆர்' படத்திற்கான வெளியீட்டிற்கு முந்தைய மேலும் சில நிகழ்வுகள் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.