ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சினிமா துறையில் பாலியல் தொல்லை இருப்பதாக பல நடிகைகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். மீ டூ புகார் அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார்கள். தயாரிப்பாளர் முதல் பாடல் ஆசிரியர் வரை மீ டூ புகாரில் சிக்கினர்.
சினிமாவில் செல்வாக்கு மிக்க புன்புலத்தில் இருந்து வந்த நடிகைகளும் தங்களுக்கு பாலியல் தொல்லை இருந்தது என்று கூறி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழ் சினிமாவின் பெரிய ஆளுமையான சரத்குமாரின் மகள் வரட்சுமி ஒரு தொலைக்காட்சியின் உயர் அதிகாரி தன்னை தவறாக அணுகியதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் செல்வாக்கு மிக்க நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மோகன்பாபுவின் மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சுவும் தனக்கும் பாலியல் தொல்லை இருந்ததாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நானும் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டுள்ளேன். சக்தி வாய்ந்த ஒருவரின் மகள் என்பதால், எனக்கு எதவும் அப்படி நடக்காது என்றுதான் ஆரம்பத்தில் நம்பி இருந்தேன். ஆனால் இரக்க மற்றவர்களை நானும் சந்திக்க வேண்டியது இருந்தது. என்று கூறியுள்ளார்.
இவர்களுக்கே இப்படி என்றால் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வரும் பெண்களின் பாதுகாப்பு மிகுந்த கவலை அளிப்பதாக சினிமா ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.