இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
சென்னை : தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தொடர்புடைய பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ரூ.1000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பைனான்சியர்கள், தொழிலதிபர்கள் வீடுகள், அலுவலகங்கள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சில தினங்களுக்கு முன் சோதனை நடத்தினர். இரண்டு தினங்களுக்கு மேலாக நடந்த சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்ட என்ற விபரம் வெளியாகி உள்ளது.
அவற்றில் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, கோ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு தொடர்புடைய வீடு, அலுவலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3.82 கோடி ரொக்க பணம், 8.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர போலியான ரசீதுகள் உருவாக்கி பொய் கணக்கு காண்பித்து ரூ.1000 கோடி வரி செய்து பலவற்றில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரி துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.