லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
சென்னை : தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தொடர்புடைய பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ரூ.1000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பைனான்சியர்கள், தொழிலதிபர்கள் வீடுகள், அலுவலகங்கள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சில தினங்களுக்கு முன் சோதனை நடத்தினர். இரண்டு தினங்களுக்கு மேலாக நடந்த சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்ட என்ற விபரம் வெளியாகி உள்ளது.
அவற்றில் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, கோ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு தொடர்புடைய வீடு, அலுவலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3.82 கோடி ரொக்க பணம், 8.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர போலியான ரசீதுகள் உருவாக்கி பொய் கணக்கு காண்பித்து ரூ.1000 கோடி வரி செய்து பலவற்றில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரி துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.