பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
தமிழ் சினிமா துறையில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் என்ற அமைப்பும், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கம் என்ற அமைப்பும் செயல்பட்டு வருகிறது.
இதில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சிலர், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தை சார்ந்த உறுப்பினர்கள் பணியாற்றும் படபிடிப்பு தளங்களுக்கு சென்று ரெய்டு என்கிற பெயரில் பணி வாய்ப்பை தடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வீ.பாபு தொழிலாளர் நலத்துறை இணை ஆணையரிடம் புகார் அளித்தார். இதை தொடர்ந்து இரு சங்க நிர்வாகிளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது.
இதன் முடிவில் ஒரு சங்க உறுப்பினர்களின் பணியை மற்றொரு சங்கத்தினர் தடுக்கவோ, இடையூறு செய்யவோ கூடாது என இரு சங்கத்திடமும் கடிதம் பெறப்பட்டு பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர் சங்க பொதுச் செயலாளர் வீ.பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.