ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
முன்னணி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, நடுநிசி நாய்கள், வெப்பம், நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே, யான் உள்ளபட பல படங்களை தயாரித்து உள்ளார். அமலாபால், அதர்வா நடித்த முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தை இயக்கினார். எல்ரெட் குமார் சினிமா தயாரிப்புடன் கல்குவாரி உள்ளிட்ட வேறுபல தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
இவர் மீது வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரித்துறைக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து எல்ரெட் குமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் 2வது நாளாக நேற்று நள்ளிரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
எல்ரெட் குமாரின் சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது. ஆய்வுக்கு பிறகுதான் அவர் எத்தனை கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்று தெரியவரும், என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.