மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
முன்னணி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, நடுநிசி நாய்கள், வெப்பம், நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே, யான் உள்ளபட பல படங்களை தயாரித்து உள்ளார். அமலாபால், அதர்வா நடித்த முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தை இயக்கினார். எல்ரெட் குமார் சினிமா தயாரிப்புடன் கல்குவாரி உள்ளிட்ட வேறுபல தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
இவர் மீது வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரித்துறைக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து எல்ரெட் குமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் 2வது நாளாக நேற்று நள்ளிரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
எல்ரெட் குமாரின் சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது. ஆய்வுக்கு பிறகுதான் அவர் எத்தனை கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்று தெரியவரும், என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.