இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அஜித் ரசிகர்களின் மனதில் நிறைந்த ஒரு படம் என்றால் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011ல் வெளிவந்த 'மங்காத்தா' படத்தைச் சொல்லலாம். வித்தியாசமான அஜித்தை அந்தப் படத்தில் காட்டியிருந்தார் வெங்கட் பிரபு. அடுத்து எப்போது 'மங்காத்தா 2' எடுக்கப் போகிறீர்கள் என ரசிகர்கள் அவரிடம் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், அஜித்தோ தொடர்ந்து இயக்குனர் சிவாவுடன் பயணித்தார். இப்போது வினோத்துடன் பயணித்து வருகிறார். அவரது பார்வை எப்போது வெங்கட் பிரபு பக்கம் திரும்பும் என்றுதான் தெரியவில்லை.
இதனிடையே, நாளை வெளியாக உள்ள 'வலிமை' படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டைப் பெற்றுவிட்டதாக வெங்கட் பிரபு நேற்று பதிவிட்டிருந்தார். அதற்கு வெங்கட் பிரபுவின் அப்பா கங்கை அமரன், “பிரபு, பிரேமையும் கூட்டிட்டு போ” எனக் கமெண்ட் போட்டிருந்தார்.
ஒரு குறும்புக்கார ரசிகர், “விட்டுபுட்டே படம் எடுக்க மாட்டாங்க, விட்டுபுட்டா படம் பாப்பாங்க,” என குறும்புத்தமானக் போட்டிருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் அவரது தம்பியான பிரேம்ஜி கண்டிப்பாக இருப்பார் என்பது இந்த உலகத்திற்கே தெரிந்த விஷயம். அஜித் படத்தைப் பார்க்க தம்பி பிரேம்ஜியை விட்டுவிட்டா செல்வார் வெங்கட் பிரபு. நாளை அதிகாலை தெரிந்துவிடும்.