பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க- 2 படத்தை அடுத்து சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் சூர்யாவுடன் பிரியங்கா மோகன், திவ்யா துரைசாமி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, வினய் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் மார்ச் 10ம் தேதி வெளியாகிறது.
இந்தப்படத்தின் தமிழ் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் தெலுங்கு டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சூர்யா தனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். இந்த நிலையில் அடுத்தபடியாக நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. விரைவிலேயே அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தற்போது ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவே தயாரித்து நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.