மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
டாக்டர் படத்தை அடுத்து டான் படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து தெலுங்கில் அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படத்தை ஜதிரத்னலு படத்தை இயக்கிய அனுதீப் இயக்குகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் நாகார்ஜுனா - நாக சைதன்யா இணைந்து நடித்த பங்கார் ராஜு என்ற படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் படத்தில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க போவதாக இன்னொரு தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் ஏற்கனவே தயாரித்த மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.