நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
டாக்டர் படத்தை அடுத்து டான் படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து தெலுங்கில் அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படத்தை ஜதிரத்னலு படத்தை இயக்கிய அனுதீப் இயக்குகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் நாகார்ஜுனா - நாக சைதன்யா இணைந்து நடித்த பங்கார் ராஜு என்ற படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் படத்தில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க போவதாக இன்னொரு தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் ஏற்கனவே தயாரித்த மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.