துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்தப் படம் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படம் பிப்ரவரி 14ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை சம்பந்தப்பட்ட பட நிறுவனம் வெளியிடவில்லை. என்றாலும் பிரபாஸின் ரசிகர்கள் ராதே ஷ்யாம் படத்தை கண்டிப்பாக தியேட்டரில்தான் வெளியிட வேண்டும். திரையரங்குகளில் பார்த்தால் மட்டுமே படம் திருப்திகரமாக இருக்கும் என்று கருத்து கூறி வருகிறார்கள். இதனிடையே ராதே ஷ்யாம் படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளதால் அவ்வளவு தொகை கொடுத்து ஓடிடி நிறுவனங்கள் வாங்க முன்வராது. ஆகவே படம் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியாகும் என்கிறார்கள்.