ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
பிரபாஸின் சாஹோ படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை எல்வின் சர்மா. இவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் தனது இரண்டு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை சிலர் ட்ரோல் செய்து வருகிறார்கள். இதுகுறித்து தான் அளித்த ஒரு பேட்டியில் எல்வின் சர்மா கூறுகையில், தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் எனக்கு வலிமை கிடைக்கிறது. நான் அதை அழகாக பார்க்கிறேன். அதோடு தாய்ப்பால் என்பது ஆரோக்கியமான விசயங்களில் ஒன்று. முக்கியமாக பெண்களுக்கு மார்பகம் இருப்பது தாய்பால் கொடுப்பதற்காகத்தான். அதைக் சொல்வதற்கும், அது குறித்த புகைப்படங்களை பதிவு செய்வதற்கும் எதற்காக வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த பதிலுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது,