புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
பிரபாஸின் சாஹோ படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை எல்வின் சர்மா. இவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் தனது இரண்டு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை சிலர் ட்ரோல் செய்து வருகிறார்கள். இதுகுறித்து தான் அளித்த ஒரு பேட்டியில் எல்வின் சர்மா கூறுகையில், தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் எனக்கு வலிமை கிடைக்கிறது. நான் அதை அழகாக பார்க்கிறேன். அதோடு தாய்ப்பால் என்பது ஆரோக்கியமான விசயங்களில் ஒன்று. முக்கியமாக பெண்களுக்கு மார்பகம் இருப்பது தாய்பால் கொடுப்பதற்காகத்தான். அதைக் சொல்வதற்கும், அது குறித்த புகைப்படங்களை பதிவு செய்வதற்கும் எதற்காக வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த பதிலுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது,