மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
டாக்டர், டான் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் அயலான். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், பானுப்ரியா, யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டர் ரூபன் ஒரு பேட்டியில் கூறுகையில், அயலான் படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும். குறிப்பாக ஏலியன்கள் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட வேலைகள் உள்ளது. அதனால் தான் படம் வெளியாவதில் தாமதம் ஆகி வருகிறது. அந்த வகையில் குழந்தைகளை வெகுவாகக் கவரக்கூடிய இந்த படம் திரைக்கு வரும்போது சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும். அந்த அளவுக்கு அவரது கேரியரில் இந்தப் படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார்.