ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
டாக்டர், டான் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் அயலான். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், பானுப்ரியா, யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டர் ரூபன் ஒரு பேட்டியில் கூறுகையில், அயலான் படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும். குறிப்பாக ஏலியன்கள் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட வேலைகள் உள்ளது. அதனால் தான் படம் வெளியாவதில் தாமதம் ஆகி வருகிறது. அந்த வகையில் குழந்தைகளை வெகுவாகக் கவரக்கூடிய இந்த படம் திரைக்கு வரும்போது சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும். அந்த அளவுக்கு அவரது கேரியரில் இந்தப் படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார்.