துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே தற்போது மும்பையில் வசித்து வருகிறார். அங்கு புதிய வீடு ஒன்றை வாங்கி நேற்று கிரகப்பிரவேசம் செய்து குடி புகுந்துள்ளார்.
அது குறித்து தன்னுடைய சமூகவலைதளத்தில், “ஒரு வருடமாகக் காத்திருந்த இன்றைய நன்னாள், அனைத்து கனவுகளும் நிறைவேறியது. உங்கள் மீது நம்பிக்கை வைத்து கடினமாக உழைக்கவும். இந்த பிரபஞ்சம், பிடிவாதமான மனதின் மீது காதலில் விழுகிறது,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
கடந்த வருடம் மும்பை பாந்த்ரா பகுதியில் கடலைப் பார்த்தபடி இருக்கும் 3 படுக்கையறை கொண்ட அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கினார். படங்களில் நடித்து அவர் வாங்கிய சம்பளத்தைக் கொண்டு வாங்கியதால் அந்த அபார்ட்மென்ட்டின் இன்டீரியரை அவரே முன்னின்று செய்துள்ளார்.
தென்னிந்திய நடிகைகள் பலரும் தற்போது ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்கள். பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா அதில் முன்னணியில் இருக்கிறார்கள். சமந்தா, அமலா பால் ஆகியோர் ஹிந்தி வெப் தொடர்களில் நடித்துள்ளார்கள்.
பிரபாஸுடன் பூஜா நடித்துள்ள 'ராதேஷ்யாம்' பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது. விஜய்யுடன் பூஜா நடித்துள்ள 'பீஸ்ட்', சிரஞ்சீவியுடன் தெலுங்கில் நடித்துள்ள 'ஆச்சார்யா' ஆகிய படங்கள் வெளிவந்தால் பூஜா மூன்று மொழிகளிலும் மேலும் முன்னணி இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.