புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
உலகமே கொரானோ மூன்றாவது அலையால் திண்டாடிக் கொண்டிருக்க நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளர். நேற்று “நாள் 4, மேஜிக் நிகழ்ந்த போது,” என ஒரு பனி மலையில் பனிச்சறுக்கு உடையுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதன்பின் அவர் பனிச்சறுக்கு செய்யும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டார்.
அந்த வீடியோ பதிவில் அவர் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள்தான் யாரைக் குறிக்கிறது என்பது கேள்வியாக எழுகிறது. அதில், “உங்களது ஈகோவை விடுங்கள் என வீட்டில் சொன்னார்கள். உண்மையான வார்த்தைகள் எதுவும் பேசப்படவில்லை, புதிய ஆரம்பம், ஸ்கையிங்” என பதிவிட்டுள்ளார்.
கடந்த பத்து நாட்களாக சமந்தா, நாகசைதன்யா பிரிவு பற்றி மீண்டும் செய்திகளில் அடிபட்டு வருகிறது. நாகசைதன்யா, அவரது அப்பா நாகார்ஜுனா இருவரும் இணைந்து நடித்த 'பங்கார்ராஜு' படத்தின் பிரமோஷன் நிகழ்வுகளில் இருவருமே 'பிரிவு' பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்திருந்தனர். அவற்றையும் மனதில் வைத்து சமந்தா 'ஈகோ' பற்றிய பதிவைப் பதிவிட்டிருக்கலாமோ ?.