‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

உலகமே கொரானோ மூன்றாவது அலையால் திண்டாடிக் கொண்டிருக்க நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளர். நேற்று “நாள் 4, மேஜிக் நிகழ்ந்த போது,” என ஒரு பனி மலையில் பனிச்சறுக்கு உடையுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதன்பின் அவர் பனிச்சறுக்கு செய்யும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டார்.
அந்த வீடியோ பதிவில் அவர் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள்தான் யாரைக் குறிக்கிறது என்பது கேள்வியாக எழுகிறது. அதில், “உங்களது ஈகோவை விடுங்கள் என வீட்டில் சொன்னார்கள். உண்மையான வார்த்தைகள் எதுவும் பேசப்படவில்லை, புதிய ஆரம்பம், ஸ்கையிங்” என பதிவிட்டுள்ளார்.
கடந்த பத்து நாட்களாக சமந்தா, நாகசைதன்யா பிரிவு பற்றி மீண்டும் செய்திகளில் அடிபட்டு வருகிறது. நாகசைதன்யா, அவரது அப்பா நாகார்ஜுனா இருவரும் இணைந்து நடித்த 'பங்கார்ராஜு' படத்தின் பிரமோஷன் நிகழ்வுகளில் இருவருமே 'பிரிவு' பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்திருந்தனர். அவற்றையும் மனதில் வைத்து சமந்தா 'ஈகோ' பற்றிய பதிவைப் பதிவிட்டிருக்கலாமோ ?.




