பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் |
நாகப்பட்டினத்தை சேர்ந்த பள்ளி மாணவி தேவசங்கரி. இவர், பிளஸ் 2 முடித்ததும் நர்சிங் படிக்க விரும்பினார். ஆனால் குடும்ப வறுமை காரணமாக தொடர்ந்து அவரால் படிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது தந்தை நடத்தி வந்த சைக்கிள் பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இவரை பற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இதை அறிந்த சிவகார்த்திகேயன், தேவசங்கரியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் தான் நர்சிங் படித்து நோயாளிகளுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும், அதுவே தன் கனவு என்றும் கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு நர்சிங் பயிற்சி கல்லூரியில் தேவசங்கரி சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்துள்ளார் சிவகார்த்திகேயன். அதோடு தேவசங்கரியின் குடும்பத்தினருக்கு பொங்கலுக்கு புத்தாடையும் எடுத்து கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.