‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மரைக்கார் படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில், நடித்து வரும் படம் 'வாஷி' (கோபம்) அவரது குடும்பத்தின் சொந்த தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகனாக டொவினோ தாமஸ் நடித்து வருகிறார்.. கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால நண்பரான விஷ்ணு ராகவ் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த நவ-28ல் இதன் படப்பிடிப்பு துவங்கியது..
இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற வந்த நிலையில் தான் கீர்த்தி சுரேஷ் கொரோனா தொற்றுக்கு ஆளானார். சமீபத்தில் அதிலிருந்து மீண்டுவந்த நிலையில் மீண்டும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்து நடிக்க ஆரம்பித்தார். இந்தநிலையில் நேற்றுடன் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ள நடிகர் டொவினோ தாமஸ், “படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. விஷ்ணு ராகவ் போன்ற நண்பரின் முதல் படத்தில் நான் ஹீரோவாக நடித்தது மிகப்பெரிய மகி'ழ்ச்சி.. உலகம் உனக்கானதாக மாற வாழ்த்துகிறேன். என்னுடன் நடித்த அற்புதமான நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நன்றி” என கூறியுள்ளார்




