புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தென்னிந்தியத் திரையுலகத்தில் கடந்த வருடம் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் நாகசைதன்யா, சமந்தா பிரிவும் ஒன்றாக இருந்தது. தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து நாகசைதன்யாவின் குடும்பப் பெயரான 'அக்கினேனி' என்பதை சமந்தா நீக்கியது அவர்களது பிரிவு சர்ச்சையை ஆரம்பித்து வைத்தது.
அதன்பின் கடந்த வருடம் அக்டோபர் மாதம் சமந்தா, நாகசைதன்யா இருவரும் சமூக வலைத்தளங்களில் தங்களது பிரிவை ஒரே மாதிரியான அறிக்கையாக வெளியிட்டனர்.
தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அந்த அறிக்கைப் பதிவை சமந்தா தற்போது நீக்கியுள்ளார். நாகசைதன்யாவின் சமூக வலைத்தளங்களில் அந்தப் பதிவு அப்படியே இருக்க சமந்தா மட்டும் நீக்கியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனது பிரிவு பற்றிய அறிவிப்புக்குப் பிறகு நாகசைதன்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கினார் சமந்தா. தற்போது பிரிவு பற்றிய அறிவிப்பையும் நீக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.