பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

நடிகர் தனுசும், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக பரஸ்பரம் அறிவித்திருக்கிறார்கள். இருவரும் முறைப்படி கோர்ட் மூலம் விவாகரத்து பெற இருக்கிறார்கள். இந்த நிலையில் தனுசின் தந்தை கஸ்தூரிராஜா இதுபற்றி கூறியிருப்பதாவது:
தனுசும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக சின்ன சண்டை அவ்வளவுதான். இது வழக்கமான குடும்ப சண்டைதான். இருவரும் இப்போது ஐதராபத்தில் இருக்கிறார்கள். அவர்களை தொடர்பு கொண்டு இருவருக்கும் தக்க அறிவுரை கூறியிருக்கிறேன். விரைவில் அவர்கள் நல்ல முடிவுகளை எடுப்பார்கள். என்றார்.
இயக்குனரும், விஜய்யின் தந்தையுமாக எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: கணவன்-மனைவி பிரிந்த செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். இது கனவாக இருக்க கூடாதா, இது பொய்யான செய்தியாக இருக்க கூடாதா என்று நினைக்கிறேன். குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடு சர்வ சாதாரணம். அதற்கு பிரிவு தீர்வல்ல. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதெங்கே... நமக்கும் கீழே உள்ளவர்கோடி என்பதை நினைத்து நிம்மதி தேடு என்கிற கண்ணதாசன் வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது. நல்லதே நடக்கும். என்று கூறியிருக்கிறார்.




