இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
நடிகர் தனுசும், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக பரஸ்பரம் அறிவித்திருக்கிறார்கள். இருவரும் முறைப்படி கோர்ட் மூலம் விவாகரத்து பெற இருக்கிறார்கள். இந்த நிலையில் தனுசின் தந்தை கஸ்தூரிராஜா இதுபற்றி கூறியிருப்பதாவது:
தனுசும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக சின்ன சண்டை அவ்வளவுதான். இது வழக்கமான குடும்ப சண்டைதான். இருவரும் இப்போது ஐதராபத்தில் இருக்கிறார்கள். அவர்களை தொடர்பு கொண்டு இருவருக்கும் தக்க அறிவுரை கூறியிருக்கிறேன். விரைவில் அவர்கள் நல்ல முடிவுகளை எடுப்பார்கள். என்றார்.
இயக்குனரும், விஜய்யின் தந்தையுமாக எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: கணவன்-மனைவி பிரிந்த செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். இது கனவாக இருக்க கூடாதா, இது பொய்யான செய்தியாக இருக்க கூடாதா என்று நினைக்கிறேன். குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடு சர்வ சாதாரணம். அதற்கு பிரிவு தீர்வல்ல. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதெங்கே... நமக்கும் கீழே உள்ளவர்கோடி என்பதை நினைத்து நிம்மதி தேடு என்கிற கண்ணதாசன் வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது. நல்லதே நடக்கும். என்று கூறியிருக்கிறார்.