சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
கிட்டத்தட்ட 18 வருடங்களாக நட்சத்திர தம்பதிகளாக வலம்வந்த தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களது பிரிவு குறித்த தகவலை வெளியிட்டிருந்தனர். இத்தனைக்கும் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக அரசல் புரசலாக கூட சமீபத்தில் செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. அதனாலேயே இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களையும் திரையுலகை சேர்ந்தவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் விசாகன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் தனது சகோதரி ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷுடனான பிரிவு செய்தியை வெளியிட்ட கொஞ்ச நேரத்திலேயே, சமூக வலைதளப் பக்கத்தில் தனது புரொபைல் படத்தை மாற்றிவிட்டார்.
தனது சகோதரிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தானும் ஐஸ்வர்யாவும் சிறு குழந்தைகளாக இருந்தபோது தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது புரொபைல் பிக்சராக மாற்றி வைத்துள்ளார்.