Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்தின் பின்னணி என்ன?

19 ஜன, 2022 - 10:13 IST
எழுத்தின் அளவு:
reason-behind-dhanush-aishawarya-divorce

நடிகர் தனுஷ் மனைவியும், ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா விவாகரத்து பின்னணி குறித்து பலவாறாக பேசப்பட்டு வருகிறது. திரைப்பட இயக்குனர் கஸ்துாரி ராஜாவின் இளைய மகனான தனுஷ், 2002ல் 'துள்ளுவதோ இளமை' படம் வாயிலாக 22 வயதில் நாயகனாக அறிமுகமானார். 2004ல் தன்னை விட இரண்டு வயது மூத்தவரான ஐஸ்வர்யாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் தனுஷ் மணந்தார். தொடர்ந்து ரஜினி பட டைட்டில்களை பயன்படுத்தினார். 'பொல்லாதவன்', 'படிக்காதவன், தங்க மகன், கொடி' என பல படங்களின் பெயரை தன் படத்திற்கு சூட்டினார். மாமனார் பாணியில் ஹாலிவுட் படத்திலும் நடித்தார்.

போயஸ் கார்டனில் கடந்தாண்டு பிப்ரவரியில் புது வீடு கட்ட பூமி பூஜையும் போட்டார். இதில் ரஜினியும் குடும்பத்துடன் பங்கேற்றார். ஐஸ்வர்யா இயக்கிய '3' படத்தில் நடித்த தனுஷ், 'கொலவெறி...' பாடலால் உலகம் முழுதும் பிரபலமானார். அப்படத்தில் ஸ்ருதிஹாசன் உடன் கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வேளையில் மனைவியை விவாகரத்து செய்வதாக தனுஷ் அறிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் என்ன
விவாகரத்து குறித்து தமிழ் திரையுலக வட்டாரங்கள் கூறியதாவது: ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இரண்டாவது திருமணம் செய்த போது, திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த தனுஷ், ரஜினி வீட்டு மூத்த மருமகன் அந்தஸ்த்தை மேலும் மெருகேற்றினார். அதேநேரத்தில் பாடல் எழுதுவதாக கூறி தனியே வசிக்க தொடங்கிய தனுஷ் பார்ட்டியில் நடிகையருடன் பங்கேற்ற போட்டோ மற்றும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வதந்திகளை பரப்பின. ஆனாலும் பொது நிகழ்ச்சியில் தம்பதி சமேதமாய் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை தனுஷும், ஐஸ்வர்யாவும் வழக்கமாக கொண்டிருந்தனர்.

கடந்தாண்டு தனுஷ் தேசிய விருதை பெற்றபோதும் 'பெருமைமிகு மனைவி' என ஐஸ்வர்யா சமூக வலைதளத்தில் வாழ்த்தி இருந்தார். சமீபகாலமாக விவாகரத்தான திரையுலகை சேர்ந்தவர்களுடன் தனுஷ் காட்டிய நெருக்கமே அவரது வாழ்க்கையில் இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது. ரஜினியின் மூத்த மருமகன் என்ற அந்தஸ்த்தை கழற்றி வைக்கும் அளவுக்கு 'தனுஷ் யாருக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்?' என்பதே இப்போது பலரது கேள்வியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

'இளைஞர்களுக்கு எச்சரிக்கை'
* விவாகரத்து குறித்து நடிகை கஸ்துாரி, ''விவாகரத்து முடிவு பெற்றோருக்கு எவ்வளவு சரியானதாக இருந்தாலும் குழந்தைகளுக்கு அது எப்போதும் தவறாகும். குழந்தைகளின் நலனுக்காக ஒன்றாக இருக்க வேண்டும். குடும்பத்திற்கே முதலிடம் தர வேண்டும்,'' என்று கூறியுள்ளார்.

* நடிகை ஆர்த்தி, ''18 ஆண்டுகள் அன்பான வாழ்க்கை வீணாகக் கூடாது. எல்லா கருத்து வேறுபாடுகளும் விவாகரத்தில் தான் முடியும் என்பது உண்மை அல்ல. இந்த சின்ன பிரிவும், உங்களை நீங்கள் ஆராய்ந்து, விட்டுக் கொடுத்து, உங்கள் குழந்தைகளுக்காக இருவரது பாதையும் வெவ்வேறாக ஆகாமல் ஒன்றாகும் என்று நம்புகிறேன். இறைவனை வேண்டுகிறேன்,'' என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எதற்கும் துணிந்தவன் : சென்சார், ரன்னிங் டைம் வெளியானதுஎதற்கும் துணிந்தவன் : சென்சார், ... ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு ; உடனடியாக சவுந்தர்யா செய்த காரியம் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)