சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் மீண்டும் தமிழில் உருவாகியுள்ள படம் 'ஹே ஷினாமிகா'. நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் அச்சமில்லை என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த வரவேற்பு குறித்து தனது ஆச்சரியத்தை பகிர்ந்துள்ள துல்கர் சல்மான், “என்ன.. மூன்று நாட்களில் மூன்று மில்லியன் பார்வைகளா..? இந்தப்பாடல் காட்சியை படமாக்கும்போது கஜினி போல மாறி என்னுடைய ஸ்டெப்ஸ்களை மறந்து விடுவேன். அந்தவகையில் நடனத்தில் நான் செய்த தவறுகளை வெளியே தெரியாமல் அழகாக எடிட் செய்துள்ள பிருந்தாவுக்கு நன்றி” என கூறியுள்ளார்.