36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் |
தியேட்டர்களில் படம் வெளிவராமல் ஓடிடியில் வருவது ஒரு முன்னணி நடிகருக்கு அவரது வளர்ச்சியில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. அப்படி ஒரு நிலை தனுஷுக்கு இப்போது வந்திருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. தனுஷே அதை விரும்ப மாட்டார் என்பதும் நிச்சயம்.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியானது. அந்தப் படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்து படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அடுத்து தனுஷ் ஹிந்தியில் நடித்த 'அத்ராங்கி ரே' படமும் கடந்த டிசம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. அடுத்து அவர் தமிழில் நடித்துள்ள 'மாறன்' படமும் ஓடிடியில் வெளியாகப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இப்படி அடுத்தடுத்து ஓடிடியில் ஹாட்ரிக் அடிக்க உள்ளார் தனுஷ். 'மாறன்' படம் ஓடிடியில் வெளியாகும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான்.
இந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள 'தி கிரே மேன்' படம் கூட ஓடிடி தளத்தில்தான் வெளியாகப் போகிறது. இப்படி தனுஷின் நான்கு படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வருவதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படம்தான் தியேட்டர்களில் வெளியாக உள்ள படமாக அமையலாம். அந்தப் படம் வெளிவர இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதுவரை தனுஷ் ரசிகர்கள் பொறுத்திருக்க வேண்டும்.