'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா |
தியேட்டர்களில் படம் வெளிவராமல் ஓடிடியில் வருவது ஒரு முன்னணி நடிகருக்கு அவரது வளர்ச்சியில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. அப்படி ஒரு நிலை தனுஷுக்கு இப்போது வந்திருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. தனுஷே அதை விரும்ப மாட்டார் என்பதும் நிச்சயம்.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியானது. அந்தப் படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்து படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அடுத்து தனுஷ் ஹிந்தியில் நடித்த 'அத்ராங்கி ரே' படமும் கடந்த டிசம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. அடுத்து அவர் தமிழில் நடித்துள்ள 'மாறன்' படமும் ஓடிடியில் வெளியாகப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இப்படி அடுத்தடுத்து ஓடிடியில் ஹாட்ரிக் அடிக்க உள்ளார் தனுஷ். 'மாறன்' படம் ஓடிடியில் வெளியாகும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான்.
இந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள 'தி கிரே மேன்' படம் கூட ஓடிடி தளத்தில்தான் வெளியாகப் போகிறது. இப்படி தனுஷின் நான்கு படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வருவதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படம்தான் தியேட்டர்களில் வெளியாக உள்ள படமாக அமையலாம். அந்தப் படம் வெளிவர இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதுவரை தனுஷ் ரசிகர்கள் பொறுத்திருக்க வேண்டும்.