ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்கு, தமிழ்ப் படமான 'வாத்தி' படத்தின் பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. அதன்பின்னர் படத்தின் படப்பிடிப்பும் அங்கு ஆரம்பமாகி நடந்து வருகிறது.
இதனிடையே, படத்தின் கதாநாயகியான சம்யுக்தா மேனன் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக நேற்று செய்திகள் பரவின. ஆனால், அவர் படத்திலிருந்து விலகவில்லை எனவும், படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் எனவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏன், இப்படியான செய்தி படம் ஆரம்பமான சில நாளிலியே வெளியாகிறது என தெலுங்குத் திரையுலகத்திலும் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.
சம்யுக்தா மேனன் தமிழில் இதற்கு முன்பு 'களரி, ஜுலை காற்றில்' ஆகிய படங்களில் நடித்தவர்தான். அப்போது அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதன்பின் சில முக்கிய மலையாளப் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது தெலுங்கில் பவன்கல்யாண், ராணா டகுபட்டி நடிக்கும் 'பீம்லா நாயக்' படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.