ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கொரோனா தாக்கம் துவங்கியதிலிருந்து கடந்த இரண்டு அலைகளின் போதும் திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தனர். ஆனால் ஒமிக்ரான் பரவல் காரணமாக துவங்கியுள்ள மூன்றாவது அலையில் கடந்த ஒரு மாதத்திற்கு உள்ளாகவே திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேசமயம் வருமுன் காப்போம் என்கிற நடவடிக்கையிலும் சிலர் இறங்கியுள்ளனர். நடிகை மாளவிகா மோகனன், தான் அந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை தனது சமூகவலைதளம் மூலம் உறுதி செய்துள்ளார். இஞ்சி மற்றும் புளி கலந்த தேனீர் தான் இந்த மாதம் முழுவதும் தான் குடிக்க போவதாக கூறியுள்ள மாளவிகா மோகனன், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என நம்புகிறார்.




