லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய். ஓரிரு படங்களில் நடித்தவருக்கு அதன்பிறகு வெள்ளித்திரையில் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் வீட்டில் அபிநய் - பாவனி விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அப்போது கூட அபிநய் பற்றி நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன் என, அபிநய்க்கு சப்போர்ட்டாக தான் அபர்ணா தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அபர்ணா இன்ஸ்டாவில் தனது பெயரை அபர்ணா அபிநய் என்பதை மாற்றி அபர்ணா வரதராஜன் என மாறியுள்ளார். இதனால் இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு பிரிய போவது மாதிரியான தகவல்கள் சமூகவலைதளங்களில் உலா வர தொடங்கி உள்ளன.
ஏற்கனவே நடிகை சமந்தா ஆரம்பத்தில் இப்படி தனது கணவரின் குடும்ப பெயரை தனது பெயருக்கு பின்னால் இருந்ததை நீக்கினார். பின்னர் அவர்கள் பிரிவதாக அறிவிப்பு வந்தது. இதனால் அபிநய் - அபர்ணா இடையேயும் அது மாதிரி இருக்குமோ என செய்திகள் பரவ தொடங்கி உள்ளன.
இந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை வட்டாரங்களில் விவாகரத்து வதந்தியாக பரவி வருகிறது. எனினும், அபர்ணாவோ, அபிநய்யோ இதுகுறித்து எந்தவொரு விளக்கமும் இதுவரை தெரிவிக்கவில்லை. சமூகவலைதளத்தில் எதற்காக அபிநய் பெயரை நீக்கினர்கள் என கேள்வி எழுப்பி வருவதோடு, அபிநய் நல்லவர் தவறான முடிவை எடுக்க வேண்டாம் அபர்ணா என அறிவுரையும் வழங்கி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு வாழ்வில் புதிய வாய்ப்புகளை, அடையாளங்களை ஏற்படுத்தி தரும் என்பார்கள். ஆனால் அபிநய்க்கோ இப்படி ஒரு அதிர்ச்சி விஷயம் நடக்கும் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். இருப்பினும் இது உண்மையாக இருக்க கூடாது என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.