‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இந்த படத்தின் இசை பணியை சந்தோஷ் நாராயணன் லண்டனில் தொடங்கியதை அடுத்து வடிவேலுவும் இயக்குனர் சுராஜ்-ம் லண்டன் சென்று இருந்தார்கள். பத்து நாட்களாக லண்டனில் தங்கி விட்டு சென்னை திரும்பிய அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது. அதையடுத்து வடிவேலு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கும் வடிவேலுவை மூன்று நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். இதையடுத்து வடிவேலு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சுப்பிரமணியன், கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் என்னிடத்தில் நலம் விசாரித்தார்கள். மக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி. நான் மிகவும் நலமாக இருக்கிறேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அனைவருக்கும் மிகச் சிறப்பாக அமையும் என வாழ்த்துகிறேன் என்று வடிவேலு தெரிவித்திருக்கிறார்.




