இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். பிரமாண்ட ஆக்ஷன் படங்கள் மூலம் உலக புகழ்பெற்றவர். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடியின் உறவினரும், பிரபல பத்திரிகையாளருமான மரியாவை காதலித்து திருமணம் செய்தார் அர்னால்ட். 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். 4 குழந்தைகளை பெற்றனர். அந்த குழந்தைகளும் பெரியவர்களாகி அவர்களுக்கும் திருமணம் நடந்து செட்டிலாகி விட்டார்கள்.
இந்த நிலையில் அர்னால்ட் தன் வீட்டில் வேலை செய்த ஒரு பெண்ணுடன் ரகசியமாக குடும்பம் நடத்தி அவர் மூலமும் ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டார். ஒரு கட்டத்தில் இதனை வெளிப்படையாக அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த மரியா கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
25 வருட வாழ்க்கை, 4 குழந்தை இதற்கு பிறகும் விவாகரத்தா என்று நீதிமன்றம் யோசித்தது. முதலில் இருவருக்கும் இடையிலான சொத்து பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்தது. அதன்பிறகு ஜீவனாம்ச பிரச்சினையை தீர்த்து வைத்தது. இதை செய்து முடிக்கவே 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது இருவருக்கும் முறைப்படியான விவாகரத்தை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.