பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு |
கடந்த சில மாதங்களாகவே சமந்தா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் அடிக்கடி ஹாட் டாபிக்காக மீடியாக்களில் பேசப்பட்டு வருகிறது. பேமிலிமேன்-2 சர்ச்சை, கணவருடன் திருமண முறிவு என பிரச்சனைகள் சுழன்றடித்தாலும் அவற்றை எல்லாம் மறப்பதற்காக அவ்வப்போது நண்பர்களுடன் டூர் கிளம்பி விடுகிறார் சமந்தா. சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு தான் ஆடிய நடனம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற சந்தோஷத்தில் தற்போது கேரளாவுக்கு விடுமுறையை கழிக்க கிளம்பி சென்றுள்ளார் சமந்தா.
கேரளாவில் ஆழப்புழாவில் தங்கியுள்ள அவர், தான் தங்கியிருக்கும் போட் ஹவுஸில் இருந்து இயற்கை காட்சியை ரசிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக 2014 ல் அவர் ஆலப்புழா சென்றிருந்தார். அதைவிட முக்கியமான விஷயம் அவரும் நடிகர் நாகசைதன்யாவும் இதே ஆழப்புழாவில் 2010ல் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ஏ மாயா செசாவே என்கிற படத்தில் நடித்தபோதுதான் காதல் வசப்பட்டனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.